வாகன சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்..! தஞ்சை அருகே பரபரப்பு ...!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறையினர் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை ஐந்து தலைப்பு வாய்க்காலில் வழக்கமான வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ரெனால்ட் டெஸ்டர் காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் காரைக்கால் மாவட்டம் ஊழியபத்து பகுதியைச் சேர்ந்த பாலகுரு (வயது 50), மயிலாடுதுறை கல்லறை தோப்பு தெருவைச் சேர்ந்த எட்வின் லியோ (வயது 36), மற்றும், காரைக்கால் மாவட்டம் நிரவி புதுமனை தெருவைச்ச சேர்ந்த அப்துல்காதர் (வயது 36) ஆகிய மூன்று பேரும் இருந்தனர்.
இதையும் படிக்க } பட்டம் பெற வந்த மாணவர் ...! ஆடைகளை களைந்து சோதனை நடத்திய காவல்துறை...!
அவர்களிடம் போலீசார் சோதனை செய்த போது நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அதோடு, அதற்கான முறையான உரிமம் ஏதும் இல்லாததால், அந்த மூவரையும் காருடன் சேர்த்து, திருவிடைமருதூர் காவல் நிலையம் அழைத்து வந்து காலை முதல் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவமானது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க } 'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்...முதலமைச்சர் கடிதம்!