அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .......

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .......

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான அனந்தராமன் என்பவர்  தாக்கல் செய்துள்ள மனுவில்,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும் இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் எண்னிக்கை அதிகமாக இருப்பதாக மனுவில் கூறியுள்ளார். நியமனங்களிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | 12 மணிநேர வேலை திருத்த சட்டம்...கண்டனம் தெரிவித்த எடப்பாடி...!

எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகத்தை கண்காணிக்க குழு ஒன்று அமைத்து உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை  நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு, 
4 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்