தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை...

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு?  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை...

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலையின் பரவல் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் பலனாக தமிழகத்தில் பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கிய நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை ஆலோசனையில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனையானது தொடங்க கூடும் என்றும்  மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.  இக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.