பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... வலைதளத்தில் பரப்பி போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள்

மதுரை அலங்காநல்லூர் அருகே நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... வலைதளத்தில் பரப்பி போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர்  பிரவீன் குமார்.  இவர்  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது

.அப்போது நேற்று தன் பிறந்த நாளையொட்டி , உறவினர் ஜெயசூர்யா, மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் மந்தையில் பட்டாகத்தியால் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. அதனைதொடர்ந்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார்  குமாரம் விஏஓ சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியவர்களை கைது செய்து ,அவர்களிடமிருந்த ஆயுத்தை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.