டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தேமுதிக போராட்டம்...!

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தேமுதிக போராட்டம்...!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரில் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியும், தற்போது வரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

இதையும் படிக்க : எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்... கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!

இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகளும், மருத்துவமனைக்கு வரும் பெண்களும், வயதானவர்களும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.