”திமுக வன்முறை கலாச்சார கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது” - கடம்பூர் ராஜூ

”திமுக வன்முறை கலாச்சார கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது” - கடம்பூர் ராஜூ

திமுக வன்முறை கலாச்சார கட்சி என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு,   தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக கூறியதோடு, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக வன்முறை கலாச்சார கட்சி என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளதாக கூறினார்.