திமுக அரசின் 100 நாள் சாதனை பேனர் கிழிப்பு!

நாமக்கல்லில் திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்கம் குறித்த பேனர் கிழித்து எறியப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திமுக அரசின் 100 நாள் சாதனை பேனர் கிழிப்பு!

நாமக்கல்லில் திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்கம் குறித்த பேனர் கிழித்து எறியப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் மாவட்டம் செம்பாலிகரடு நகராட்சி பேருந்து நிறுத்தத்தில் திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்கம் குறித்த பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இந்த பேனரை கிழித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில்  போலீசார் நடத்திய விசாரணையில், அதிமுகவை சேர்ந்த நாமக்கல் 10-வது வார்டு கிளை செயலாளர் ரமேஷ் மற்றும் தமிழரசு ஆகியோர் மது போதையில் பேனரை கிழித்தது தெரியவந்தது.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திமுகவினர் செம்பாலிகரடு காவல்நிலையத்தில் குவிந்ததால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.