இந்த தொகுதி வளர கை சின்னத்திற்கு வாக்களிங்கள்...வாக்கு சேகரிப்பில் பேசிய எ.வ.வேலு!

இந்த தொகுதி வளர கை சின்னத்திற்கு வாக்களிங்கள்...வாக்கு சேகரிப்பில் பேசிய எ.வ.வேலு!

இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு :

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளிலும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் எ.வ.வேலு ஈரோடு வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இதையும் படிக்க : கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

பின்னர் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இந்த தொகுதி வளர திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு அளியுங்கள் என பொதுமக்களிடம் கூறினார். 

பிரச்சாரம் செய்த அமைச்சர் சிவசங்கர் :

தொடர்ந்து ஈரோடு 45-வது வார்டுக்குட்பட்ட பெரியார் நகர், எஸ்.கே.எம்.பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சிவசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என கூறினார்.  திமுக அரசு செய்த நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.