பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் அறவே கைவிட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் அறவே கைவிட வேண்டும் என்று   அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் அறவே கைவிட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

இது குறித்து, அவர் வெளியிடுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பேனர்களால் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையல், தங்கள சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில்  கட்சி தலைவர் ஸ்டாலின் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததை நினைவு கூர்ந்துள்ளார்.  

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ள நிலையில், பெரும்பாலானோர் அனைனை கடைபிடித்து வருகின்றனர். ஆனாலும்,  ஆங்காங்கே கட்சி சார்பில் பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று குறிப்பிள்ள அவர்,இது போன்ற நடவடிக்கைகளை கட்சித் தலைமை ஒருபோது, அனுமதிக்காது என்றும் மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார்.