பூச்சித் தாக்குதலால் மா மரங்கள் பாதிப்பு.. செலவு அதிகரிப்பதாக மா விவசாயிகள் வேதனை!!

கிருஷ்ணகிரியில், பூச்சித் தாக்குதலால், மாம்பூக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பூச்சித் தாக்குதலால் மா மரங்கள் பாதிப்பு.. செலவு அதிகரிப்பதாக மா விவசாயிகள் வேதனை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு வழக்கம்போல் மா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது மா மரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.  

இதனால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனி மூட்டம் மற்றும் பூச்சித் தாக்குதலால், ஆலப்பட்டி, கங்கலேரி, மூங்கில் புதூர் போன்ற பகுதிகளில் உள்ள மா மரங்களில் பூக்கள் கருகி வருகின்றன.  இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால், மாம்பூக்களை பாதுகாக்கும் வகையில் மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மருந்து விலை மற்றும் ஆட்கள் கூலி என செலவு அதிகரித்து வருவதாக மா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.