குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அடுத்த புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக, புதுவயல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சைக்கும் முன் அவருக்கு மயக்க மருந்து கொடுத்த போது, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேல்சிகிச்சைக்காக அவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் டீசல் இல்லாததால், அவரை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அவர் வழியிலேயே அவர் உயிரிந்துள்ளார்.

மருத்துவர்களின் அஜாக்கிரதையால் தமிழ்ச்செல்வி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.