போராட்டம் நடத்த முடிவு... சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள்.. ரயில், பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!!

ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த மாற்றுத்திறனாளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டம் நடத்த முடிவு... சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள்.. ரயில், பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்தி வழங்க வலியுறுத்தி,  சென்னையில் மாற்றுத் திறனாளிகள் கோட்டையில் குடியேறுவோம் என்ற முழக்கத்துடன், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் நேற்றிரவு முதல் பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்னைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.