தொடர்ந்து சரிவு: குஷியில் இருக்கும் தமிழக மக்கள்

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு எட்டாயிரத்துக்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து சரிவு: குஷியில் இருக்கும் தமிழக மக்கள்

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு எட்டாயிரத்துக்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக 7 ஆயிரத்து 427 பேருக்கு மட்டுமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 61 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 15 ஆயித்திற்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையில் புதிதாக 891 பேருக்கும், சென்னையில் 439 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.