ராஜீவ் காந்தி மருத்துவமனையின் 8வது மாடியில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு... கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்!!

சென்னையில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மாயமான நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் மருத்துவமனையின் 8-வது மாடியில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி   மருத்துவமனையின் 8வது மாடியில்  அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு... கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்!!

சென்னையில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மாயமான நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் மருத்துவமனையின் 8-வது மாடியில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலி, இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுனிதாவிற்கு கடந்த மாதம் 22-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த மாதம் 23-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சுனிதா மாயமானது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு மெளலி தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான சுனிதாவில் உடல் அழுகிய நிலையில் மருத்துவமனையின் 8- வது மாடியில் ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.