நாகையில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி...
நாகை அருகே ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த அண்ணாமலையின் நடைபயணம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.
'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக நடைபயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 3-ம் கட்ட நடைபயணம் இன்று மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!
இந்நிலையில் நேற்றைய தினம் நடைப்பயணம் ஒத்திவைப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் உடல் நலக்குறைவு காரணமாக, அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த நடைபயணம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இறுதியில், கோவையில் தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் போராட்ட நடத்தி்னர்.
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்த பின்னரும் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவு கொண்டு வரவேண்டும் என அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து அரசு தரப்பு பல முறை ஆசிரியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தியது. எனினும் சுமூக உடன்பாடு ஏற்படாததால் இரவு பகலாக ஆசிரியர்கள் 8 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் கூறினர்.
இதையும் படிக்க : அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!
இந்த போராட்டம் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை டிபிஐ வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கைதாக மறுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றி சென்றனர். அப்போது போலீசாருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் ஆசிரியர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 10 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். இதேபோல் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று,ம் இதனை அரசே செலுத்தும் என்றும் கூறினார். இதேபோல், டெட் தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்த்தப்படும் என்றார்.
இதையும் படிக்க : "வரும் 11ம் தேதி; கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்” - ஓபிஎஸ்
இதேபோல், இடைநிலை ஆசிரியரிகளின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடிக்கு இடையே அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், சம வேலை சம ஊதியம் என்ற தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனதால் தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்கும் வரை தங்களது போராட்டத்தை விடப்போவதில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தங்களின் கோரிக்கை குறித்த அரசாணை பிறப்பிக்கப்படும் வரை தங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் என டெட் ஆசிரியர் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தொிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உடனான 2 நாள் மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தியது என்னென்ன?
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனா்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாக கூறினார். மேலும், கூட்டணி குறித்து பாஜக வுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், தேர்தல் நேரத்தில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் பணியின்மூலம் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான மாநாடு நடைபெற்றது. இரண்டு நாள் மாநாட்டின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அரசு கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவுக்கான உதவித் தொகை ஆயிரத்து 100 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன்மூலம் அரசுக்கு 68 கோடியே 77 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும், மாணவர்களின் நலன் கருதி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க : டிசம்பர் தேர்தலையொட்டி, மத்தியபிரதேசம், ராஜஸ்தானுக்கு பிரதமா் சுற்றுப்பயணம்...!
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளிடம் நேரடியாக விசாரணை நடத்துவதில் சிக்கல் நீடிப்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்களை முழுமையான ஈடுபாட்டுடன் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் பணியின்மூலம் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் உத்தரவிட்டார்.
இதேபோல், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடனான கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.