போலீசாருக்கு தண்ணி காட்டிய போதை ஆசாமி....நெருங்கி வந்தால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல்

திருவண்ணாமலை அருகே கடையின் மேற்கூரையின் மீது ஏறி போலீசாருக்கு தண்ணீர் காட்டிய காட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருக்கு தண்ணி காட்டிய போதை ஆசாமி....நெருங்கி வந்தால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காந்தி ரோடு அருகே அரசு டாஸ்மாக் மதுப்பானக்கடை இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் மதுபானக் கடையில் மாலை நேரத்தில் ஒரு போதை ஆசாமி குடிபோதையில் கலாட்டா செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் அங்கு வந்த போலீசாரை கண்டதும், போதை வாலிபர் ஓட்டம் பிடித்தார். போலீசாரும் பின் தொடர்ந்து வாலிபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர் போலீசாரில் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, பழை பேருந்து நிலையம் எதிரில் உள்ள கடைகளின் மேற்கூரையில் ஏறி நின்றார். அங்கு வந்த போலீசார் போதை வாலிபரை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தனார்கள்.

ஆனால் அவரோ நான் எந்த தப்பு செய்யவில்லை தப்பு செய்தால் கேளுங்கள் என்றும் என்னை நெருங்கினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மேற்கூரை தகடு எடுக்க முயன்றார்.

பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் போதை வாலிபர் 1மணி நேரம் போலீசாருக்கு தண்ணீர் காட்டி பின்னர் கீழே இறங்கி வந்தான். மேலும் போதை வாலிபரை ஆரணி நகர காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று தங்கள் பாணயில் விசாரணை செய்தனர். 

அதில் போதை வாலிபர் வேலூர் பகுதியை சேர்ந்தவன் என்பதும் ஆரணி பகுதிக்கு ஏன் வந்துள்ளார், இவன் மீது குற்ற வழக்குகள் உள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.