"அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் ஓபிஎஸ்" இபிஎஸ் தரப்பு பதில் மனு!!

தேர்தல் ஆணையத்தில், ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவிற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு அளித்துள்ளது.

"அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் ஓபிஎஸ்" இபிஎஸ் தரப்பு பதில் மனு!!

கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டும் செல்லாது எனக்கூறி இந்திய தேர்தல் ஆணையத்தில், ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல் செய்தார்.

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு, தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் தனது அறிக்கையில் ஒ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என்றே கூறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.