ரயில்வே மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்... கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை...

இரயில்வே மேம்பாலத்தில் முதியவர் குடும்ப தகராறில் தூக்கு போட்டு தற்கொலையா அல்லது யாராவது முன்விரோதத்தில் அடித்து மாட்டி விட்டார்களா என்று போலீசார் விசாரணை.

ரயில்வே மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்... கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நகர் இரயில்வே மேம்பாலத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பண்ற கோட்டை  கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் மூர்த்தி வயது 65 மதிக்கத்தக்க முதியவர் இரவு இரயில்வே மேம்பாலத்தில் படிக்கட்டில் ஏறி தடுப்பு கம்பியில் கருப்பு நிற கட்டம் போட்ட  துண்டை இரண்டாக கிழித்து அதில் முடிபோட்டு தூக்கு போட்டு இறந்த பிணமாக தொங்கினார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தூக்கு போட்டு  இறந்தவர் முதியவர் தனாக  தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது முன் விரோதத்தில் அடித்து தூக்கு மாட்டிவிட்டார்களா என உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.