விஜயபாஸ்கரை பார்த்தவுடன் கண் கலங்கி அழுத பொதுமக்கள்!! 30 நாட்களுக்கு பின் தொகுதிக்குள்... நெகிழவைக்கும் வீடியோ

தனது சொந்த ஊரான இலுப்பூரில் அங்கு குவிந்திருந்த மக்கள் விஜயபாஸ்கர் அவர்களை பார்த்தவுடன் கண் கலங்கியபடி நலம் விசாரித்தனர்.

விஜயபாஸ்கரை பார்த்தவுடன் கண் கலங்கி அழுத பொதுமக்கள்!! 30 நாட்களுக்கு பின் தொகுதிக்குள்... நெகிழவைக்கும் வீடியோ

விராலிமலையில் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடந்த 30 நாட்களாக கொரானா தொற்றிலிருந்து குணமாகி இன்று தனது தொகுதிக்கு திரும்பினார். விராலிமலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் 108 ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொரானா பெருந்தொற்றில் 30 நாட்கள்  இருந்து சரியாகி வந்த விஜயபாஸ்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தொகுதி மக்களையும் ,அரசு மருத்துவமனையும் பார்வையிட இன்று விராலிமலை இலுப்பூர் மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது தனது சொந்த ஊரான இலுப்பூரில் அங்கு குவிந்திருந்த மக்கள் விஜயபாஸ்கர் அவர்களை பார்த்தவுடன் கண் கலங்கியபடி நலம் விசாரித்தனர்.

நிவாரண பொருட்கள் தொகுப்பில் அரிசி காய்கறி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருள்களும் உள்ளடங்கிய நிவாரண பொருளை இன்று வழங்கினார். பின்னர் விராலிமலையில் கொரானா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் வழங்கினார். 

விராலிமலை தொகுதி மக்களுக்கு கடந்த ஆண்டு பெருந்தொற்றின்போது எண்ணற்ற உதவிப் பொருட்களை வழங்கினார். அவர் செய்ததை எதுவும் மறக்காமல், அந்த மக்கள் கூறியதாவது நீங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும் எங்கள் மண்ணின் மைந்தன் என்று கண்ணீர் மல்க நன்றி கூறினர். இதைப்பார்த்த விஜயபாஸ்கரும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார் . தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.