சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு....

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு....

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் சாலையில் இன்று மதியம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. உடனே சுதாரித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டிநரான ராஜேந்திரன், ஆட்டோவில் இருந்து இறங்கினார்.

அதற்குள் மளமளவேன பிடித்த தீயானது ஆட்டோ முழுவதும் பரவ ஆரம்பித்தது. கண் முன்னே ஆட்டோ எரிவதை கண்ட ராஜேந்திரம், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன், ஆட்டோவில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார், இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.