ஹெச்.ராஜாவை வருங்கால முதல்வர் என அறிவித்து ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு....

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவை வருங்கால முதல்வர் என அறிவித்து ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெச்.ராஜாவை வருங்கால முதல்வர் என அறிவித்து ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு....

தமிழக அரசின் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக ஹெச்.ராஜா செயல்பட்டாலும் அவ்வப்போது இவர் பேசும் பேச்சுக்கள் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

அதோடு இவரது கட்சியினர் இவரை பிறவி போராளி என்றும், இந்து மதத்தின் காவலன் என்றும், ஹிந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்றும் பல்வேறு வாசகங்களோடு இவரை வாழ்த்தி, வணங்கி போஸ்டர் ஒட்டப்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில், இவற்றுக்கு ஒருபடி மேலாக சென்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், வருங்கால தமிழக முதல்வரே என குறிப்பிட்டு திருப்பத்தூர் பகுதிகள் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தினர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மருதுபாண்டியர்கள் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் ஹெச்.ராஜாவை வரவேற்று இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.