ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு ! எதுவரை தெரியுமா?

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இம்மாதம் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு ! எதுவரை தெரியுமா?

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு விண்ணப்பதாரர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டதாக ஆசிரியர் ஒருவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக  தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.