நியாய விலை கடைகள் நாளை முதல் மாலை 5 மணி வரை செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு...

நியாய விலை கடைகள் நாளை முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நியாய விலை கடைகள் நாளை முதல் மாலை 5 மணி வரை செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு...

இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நியாய விலை கடைகள் அனைத்தும்  நாளை முதல் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மறு உத்தரவு வரும் வரை செயல்படும் என அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14  மளிகை பொருட்கள் தொகுப்பு வரும்  15ம் தேதி முதல் விநியோகம் செய்ய ஏதுவாக, ஜூன் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை  பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று   பிற்பகலில் டோக்கன் வழங்க பணியாளர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. முற்பகலில் வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்  விநியோகம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.