சாகும் வரை போராட்டம் நடத்திய விவசாயிகள்... ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு...

தஞ்சை அடுத்த மாரனேரியில் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றுவதை கண்டித்து சாகும் வரை போராட்டம் நடத்திய விவசாயிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாகும் வரை போராட்டம் நடத்திய விவசாயிகள்... ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு...

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த  மாரனேரி கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடமை மேம்பாட்டு குழு சார்பில் அளவீடு செய்து ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், இவர்களை பொதுபணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வெளியேற்ற வற்புறுத்துவதாக  கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களை வெளியேற்றுவதை நிறுத்திட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் 5வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் உடுக்கை அடித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது தமிழன், ராஜ்குமார், பெரியசாமி ஆகிய 3 விவசாயிகளும் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.