பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல்... ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...

கொரோனா சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு மருத்துவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல்... ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டி தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் வெற்றிசெல்வன், அதே விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வெற்றிச் செல்வனை கடந்த அக்டோபர் 18ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிச் செல்வன் தாக்கல் செய்த மனு  விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.