ஏரியில் அங்கும் இங்குமாய் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட மீன்கள்...ஆர்வமுடம் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே  ஏரியில் மீன்கள் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

ஏரியில் அங்கும் இங்குமாய் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட மீன்கள்...ஆர்வமுடம் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை  மாவட்டம் வந்தவாசி அடுத்த கிராமத்தில் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி கலங்கள் வழியாக சிறு பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது.

இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில்  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏரியில் இருந்த மீன்கள் அங்கும் இங்குமாய் துள்ளி குதிக்க தொடங்கின. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் கை தட்டி ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.