மீண்டும் உற்பத்தியை தொடங்கியது ஃபோர்டு நிறுவனம்...  இன்னும் பல மாதங்களுக்கு நிறுவனம் இயங்கும்...

ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உற்பத்தியை தொடங்கியது ஃபோர்டு நிறுவனம்...  இன்னும் பல மாதங்களுக்கு நிறுவனம் இயங்கும்...

ஃபோர்ட் நிறுவனத்திற்கு, இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் கார் தொழிற்சாலைகள் உள்ளன. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதனால் ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

தொழிலாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் ஃபோர்டு நிறுவனம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை பெற்ற ஆர்டர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தொழிற்சாலையில் ஃபோர்டின் ஈகோஸ்போர்ட் மாடலை மட்டும் உற்பத்தி செய்ய உள்ளது. மேலும் ஃபிகோ மற்றும் ஆஸ்பியர் மாடல்கள் குஜரத்தில் உள்ள சனந்த் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.