துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.68.09 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்...!!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.68.09 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டர்.

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.68.09 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்...!!

சென்னையிலிருந்து  துபாய் செல்லவிருந்த விமானத்தில் பெருமளவு கணக்கில் வராத  பணம் வெளிநாட்டிற்கு கடத்தபடவிருப்பதாக பெங்களூரில் உள்ள DRI அலுவலகத்திலிருந்து சென்னை விமானநிலைய சுங்கத்துறைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள்  சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்படவிருந்த ஃபிளை துபாய் விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளின் உடமைகள் அனைத்தையும்  சோதனை செய்தனர்.

அப்போது கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவருடைய சூட்கேஸ் மற்றும் பைகளை மீண்டும் சோதனை செய்தனர். அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்தது தெரியவந்தது.

அதனைதொடர்ந்து அவரிடமிருந்து மொத்தம் ரூ. 68.09 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில்,வேறு யாரோ ஒருவா் கொடுத்து அனுப்பிய பணத்துடன் இவா் துபாய் செல்கிறாா், என்பதும்  இது அனைத்தும் கணக்கில் இல்லாத    பணம் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இது  ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகப்பட்டனா். அதோடு  வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கா்நாடகா மாநில பயணியை கைது செய்து வருகின்றனர்.