பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜர்

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜர்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிடிவாரண்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே சிறப்பு டிஜிபி மீதான 400 பக்க குற்றப்பத்திரிக்கையை  சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.

இதனை கண்டித்த நீதிபதி, இன்றைய தினம் ஆஜராகவில்லை என்றால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்றைய விசாரணையில் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜாரானார்.