கொரோனாவை காலி பண்ணிய 4 மாவட்டங்கள்...

ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கொரோனாவை காலி பண்ணிய 4 மாவட்டங்கள்...
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.
 
கடந்த ஜூலை 2ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
மேலும், அதிகபட்சமாக கோவையில் 210 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக சென்னையில் 156 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாகவும், அதேப்போல், குறைந்தபட்சமாக தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.