8 மாதங்களுக்கு பிறகு இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: தமிழகம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்...

8 மாதங்களுக்கு பிறகு  இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: தமிழகம்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்...

43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்தக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலமாக நடைபெறும் கூட்டத்தில் நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், இக்கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது போன்ற பல நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் என தெரிகிறது.