மீனவர்களுக்கு டீசல் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - முதல்வரிடம் கோரிக்கை

மீனவர்களுக்கு டீசல் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - முதல்வரிடம் கோரிக்கை

மீனவர்களுக்கு டீசல் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீனவர் சங்க பிரதிநிதி நசிரியத்,

மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தியதற்காகவும், அனைத்து மீன்வள கல்லூரிகளில் மீனவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.