2 வயது குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய தங்க மோதிரம்!

சிவகங்கையில் 2 வயது குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய தங்க மோதிரத்தை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

2 வயது குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய தங்க மோதிரம்!

சிவகங்கையில் 2 வயது குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய தங்க மோதிரத்தை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

 சிவகங்கை பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பிரசாத், நிரஞ்சனா தம்பதியர். இவர்களுக்கு மதிமாலா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தங்க மோதிரத்தை விழுங்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக குழந்தையை  பெற்றோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அந்த மோதிரம் உணவுக்குழாயில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மயக்கவியல் மருத்துவர் உதவியுடன் நவீன எண்டாஸ்கோபி முறையில் உணவுக்குழாயில் சிக்கியிருந்த மோதிரத்தை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.