மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விஞ்சிய அரசு பள்ளிகள்.! சென்னையிலே இந்த நிலை என்றால் பிற மாவட்டங்களில்.? 

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விஞ்சிய அரசு பள்ளிகள்.! சென்னையிலே இந்த நிலை என்றால் பிற மாவட்டங்களில்.? 

தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2019-20 கல்வியாண்டில்மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 18605, இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 6533.

2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 27843, இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14763.

2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய ஒரே வாரத்தில் புதிதாக 6897 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட புதிய மாணவர்கள் அதிகமாக சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது