ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநர் கடிதம்...தமிழ்நாடு அரசு விளக்கம்...

ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநர் கடிதம்...தமிழ்நாடு அரசு விளக்கம்...

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்த நிலையில் சட்டத்துறை மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் ஆறு மாதங்களும், சட்ட மசோதாவிற்கு ஆறு வார காலத்திற்குள்ளும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா  ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது  தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், இதற்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் அளிக்க சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பி உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள | ஈபிஎஸ் என்ன வேண்டுமானாலும் பேசுவார்...இதுக்காக தான் ஆளுநருடனான சந்திப்பு...அமைச்சர் கொடுத்த பகீர்!

இது தொடர்பாகவே சட்டத்துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்திருக்கக் கூடிய நிலையில் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது