திருப்பூரில் ஆலங்கட்டி மழை- கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த ஆலங்கட்டி மழையை குழந்தைகள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

திருப்பூரில் ஆலங்கட்டி மழை- கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்

தமிழகம் முழுவதும் வானிலை பருவ மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் மாநகர் ஊத்துக்குளி அவிநாசி பல்லடம் காங்கேயம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்ஆலங்கட்டி மழை பொழிந்தது.

காலை முதல் வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை மழை பெய்தது விவசாயிகள் மற்றும் பொது மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. வீட்டின் முன் விழுந்த பனிக்கட்டிகளை சிறுவர், சிறுமிகள் கைகளில் வைத்து விளையாடி மகிழ்ந்தனர்.