3 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை... கடலுக்கு செல்ல வேண்டாம்...

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை... கடலுக்கு செல்ல வேண்டாம்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கன மழையும், நாளை நாமக்கல், அரியலூர், திருச்சி, மதுரை , விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 24 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள்அதுவரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.