தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்...

தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்...

தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, தேனி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை நீலகிரி , தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.