சட்டத்தை உருவாக்கிவிட்டு எப்படி விலக்கு அளிப்பீர்கள்...விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உத்தரவு!

சட்டத்தை உருவாக்கிவிட்டு எப்படி விலக்கு அளிப்பீர்கள்...விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உத்தரவு!

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டடம் கட்டுவதற்கு எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 

இதற்கு தடை கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஈஷா யோகா மையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க: அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என கேள்வி எழுப்பினர். மேலும், எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.