திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம்.....அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம்.....அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னார்வலர்களை கொண்டு திருச்சி, தஞ்சை மற்றும் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என கூறினார்.

இந்த திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க முடியும் என குறிப்பிட்ட அவர், சுமார் 6 மாதத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், வரும் நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என்றார்