நேர்மை, மக்கள் ஆதரவு காரணமாக பணியிடமாற்றம் செய்யப்படாத மாவட்ட எஸ்.பி,.! அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு.! 

நேர்மை, மக்கள் ஆதரவு காரணமாக பணியிடமாற்றம் செய்யப்படாத மாவட்ட எஸ்.பி,.! அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு.! 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 90% மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணி இட மாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒரே ஒரு மாவட்ட  கண்காணிப்பாளர் மட்டும் பணியிட மாற்றம் செய்யப்படாததால் காவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.  அவர் பெயர் மணிவண்ணன். 

அதிமுக ஆட்சியில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் மணிவண்ணன். இவரை அதிமுக ஆட்சியின்போதே தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவரை மீண்டும் நெல்லைக்கு மாற்றம் செய்யக்கோரி பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் போராட்டம் நடத்தினார்கள்.இதன் காரணமாக அவர் மீண்டும் நெல்லை மாவட்டத்திற்கே பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்த அளவு மக்கள் மனதில் நெருங்கிய காவல்துறை அதிகாரியாகவும், நேர்மையாளராகவும் திகழ்ந்தார். 

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில்மணிவண்ணன் அதே பொறுப்பில் நீடிக்கிறார். அவரின் நேர்மை காரணமாக அரசு அவரை பணியிட மாற்றம்செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவை நெல்லை மக்களும் பாராட்டிவருகிறார்கள். இவர் நாகர்கோவில் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.