உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சிப்பதாக மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்…    

உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக மனைவி மீது கணவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சிப்பதாக மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்…      

சென்னை புதுப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஆனந்தன்(31). இவருக்கு திருணமாகி நான்சிமேரி என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர்...இவரது மனைவி நான்சிமேரி ஜெமினி பிரிட்ஜ் பகுதியில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வவருகின்றார். இவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் குடும்ப பெரியோர்கள் இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி  சமாதானம் செய்து வைத்ததை அடுத்து பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் மனைவி மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர்.

கடந்த 15 நாட்களாக ஓட்டேரி திடீர் நகரில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவி நான்சிமேரிக்கும் அவருடன் வேலை பார்த்து வரும்  வேறொரு நபருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆனந்தன் தனது மனைவி நான்சிமேரியிடம் இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால்  கணவன் மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தன் வேலை முடித்து வந்து வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளார்.. சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்து தன்னை கொலை செய்ய முயன்றதாக  உறவினர்களிடம் ஆனந்தன் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன் நலமாக உள்ளார்.

 

இதனையடுத்து ஆனந்தன் உணவில் விஷம் கலந்து கொண்டு கொலை செய்ய முயன்ற மனைவி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைசெயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.