நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி.. தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி.. தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம், மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில், அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றி விளக்கப்பட உள்ளன.

பிரிவு வாரியாக என்னென்ன பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன?, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியானது, வரும் 29ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.