அரசியலிலும் நான் உங்க அண்ணன்... பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்... பிடிஆர்க்கு ஜெயக்குமார் அறிவுரை...

பதவி வரும்போது பணிவும் வர வேண்டும் என, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

அரசியலிலும் நான் உங்க அண்ணன்... பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்... பிடிஆர்க்கு ஜெயக்குமார் அறிவுரை...

சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ். டி. கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது மிகப்பெரிய விவாத பொருளானது. இது தொடர்பாக அவருக்கும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் உருவானது.

இந்நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயக்குமார், நீங்கள் ஏன் ஜி.எஸ். டி. கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினால், 2017-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி தாமும் ஜி.எஸ். டி. கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எதிர்கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் என்றும், அன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் என்ற முறையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, டுவிட்டர் உலகத்தில் இருந்தும், மற்றவர்களை வசைபாடுவதில் இருந்தும் விலகி மக்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள் என கூறியுள்ள அவர், இனியாவது நல்ல மாணவன் எப்ப டி தவறாமல் பள்ளிக்கு செல்வானோ? அதுபோல கடமை உணர்வுடன் ஜி.எஸ். டி. கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.