தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்…

தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்…

தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில்வே ஐ.ஜி சுமித் சரண் ஊர்க்காவல்படை ஐ.ஜி.யாகவும்  பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. தினகரன் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி கயல்விழி, காவல் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக விஜயகுமார், திண்டுக்கல் எஸ்.பியாக ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் எஸ்.பியாக ரவுளிப்பிரியா, ராணிப்பேட்டை எஸ்.பியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்.பியாக விக்ரமன், பரங்கிமலை துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையராக ஷியமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.