மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாக கூறினார்.

மொட்டைக்கு இனி கட்டணம் இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.