ஒன்றியத் தலைவர் தேர்தல் முறையாக நடைபெறததால் சுயேட்சை வேட்பாளர் சாலை மறியல்...
திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியத் தலைவர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக எழிலரசன் என்பவர் போட்டியிட்டார். பின்னர் மறைமுக வாக்கெடுப்பு மூலம் ஒலக்கூர் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் முறைமுக தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறி எழிலரசன் ஆதரவாளர்களுடன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.