சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச புத்தக கண்காட்சி.. பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு..!

தமிழ்நாட்டில் முதல்முறையாக பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புதிய ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்தை இருகண்களாக பார்க்கின்றார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச புத்தக கண்காட்சி.. பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு..!

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

சென்னையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் புத்தக கண்காட்சி நடைபெறும். அதேப் போல் வருகின்ற ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளை சந்தித்தார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சிகள் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்குமாறு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையிலான பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்கள் குழு பல்வேறு நாடுகளை சார்ந்த தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு

இச்சந்திப்பின் போது  பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி 2023 ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். புத்தக கண்காட்சியில் 40 நாடுகளை பங்கேற்க வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புதிய ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்தை இருகண்களாக பார்க்கின்றார். 

கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அவற்றில் ஒன்றாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் இரண்டு வாரம் புத்தக கண்காட்சி நடைபெறும். அதில் குறிப்பாக பன்னாட்டு புத்தக கண்காட்சி ஜனவரி 16,17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறுகிறது. 

உதவி தொகை அறிவிப்பு

இந்த புத்தக கண்காட்சியில் 25 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 12 நாடுகள் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்கள் நாட்டின் பெருமைகள் மற்றும் சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் வைக்கலாம். மேலும் புத்தகங்களை படிப்பதற்கான பரிப்புரிமை குறித்தும், தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவி தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

40 நாடுகள் பங்கேற்பு

இந்த ஆண்டில் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் வரும் ஆண்டில் 100 நாடுகளைச் சார்ந்தவர்கள் பண்பாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 169 நாடுகள் கலந்து கொண்டன. சர்வதேச புத்தக கண்காட்சியிலும் அதே போல கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க: இனி இப்படி தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா..!!

Image

இவ்வாறு, தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, நூலக இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.