வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கு- ஆய்வாளர் வசந்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. 

வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கு- ஆய்வாளர் வசந்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பறித்து கொண்டதாக அளித்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் வசந்தி கடந்த 26 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மனு செய்தனர்.அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி இன்று மதுரை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராஜாலிங்கம் , வசந்தியை  ஒருநாள்  காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்ததுடன், விசாரணை முடிந்து நாளை மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  
உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து குற்றசாட்டில் சிக்கிய பெண் ஆய்வாளரை போலீசார் பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.