கரூர் : புத்தகத் திருவிழா...! பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..!

கரூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

கரூர் : புத்தகத் திருவிழா...! பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..!

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தகத் திருவிழாவானது, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய இந்த திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. 115 அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்ச கணக்கான தலைப்பில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமான புத்தகப் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.  

மாவட்ட நிர்வாகம் சார்பில், பகல் நேரங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் புத்தகக் கண்காட்சியினை பார்வையிட்டனர். ஒரு சில மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.